விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்துரில் இயங்கி வரும் ஸ்ரீராம் மற்றும் வேலம்மாள் போதி வளாகத்தில் இன்று நடை பெறும் பள்ளி ஆண்டு விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்த ரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
விழுப்புரம் மாவட் டம், திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள
ஓமந்துாரில் இயங்கி வரும் ஸ்ரீராம் மற்றும் வேலம்மாள் போதி வளாகத்தில் ஒன்பதாம் ஆண்டு விழா இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெற உள்ளது.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதில் வேலம்மாள் போதி பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் தன்யம்ராஜு’, சென்னை எலா கிரீன் பள்ளி நிறுவனர் சமிதா ஆகியோர் கவுரவ விருந் தினர்களாகப் பங்கேற்று பேச உள்ளார். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீராம் பள்ளி நிறுவன எஸ்.முரளி (எ)ரகுராமன் பள்ளி முதல்வர் பால சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.