சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் உள்ள எஸ் ஆர் சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு பொது தேர்வில் 122 பேர் தேர்வு எழுதினர்.

இதில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் 500 க்கு 494 மதிப்பெண் பெற்ற தனுஸ்ரீ என்ற மாணவி முதலிடமும், 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று இலக்கிய என்ற மாணவி இரண்டாம் இடமும், 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்ற கிருத்திகா மற்றும் பூஜிதா ஆகிய இரண்டு மாணவிகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இந்த தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 36 பேரும் பெற்றுள்ளனர். பள்ளி அளவில் 122 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டுகளுக்கு பள்ளி நிர்வாகமே கட்டணத்தை ஏற்றுக் கொள்வதாக பள்ளி நிர்வாக தாளாளர் எஸ் ஆர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *