தினேஷ் குமார்செய்தியாளர் திருப்பத்தூர்
பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளை பாதுகாக்கவே பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் போது ஆட்சியர் அறிவுரை..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளின் ஆண்டு ஆய்வு குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உடன் திருப்பத்தூர் சப் கலெக்டர் லட்சுமி, திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.