பொன்னேரி
செங்குன்றம் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வட்டார போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்,கும்மிடிப்பூண்டி, ஆகிய பகுதியிலுள்ள தனியார் பள்ளிகள் அடுத்த மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை செங்குன்றம் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்படி இந்த ஆய்வானது பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது. இதில் 200 மேற்பட்ட தனியார் பள்ளி வாகன ங்களை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் வாகனங்களின் ஆய்வு செய்தனர். அதன்படி வாகனங்களில் தற்காப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவல ர்கள் இளமுருகன், கருப்பையன், ராஜராஜேஸ்வரி, மற்றும் கல்வித் துறை அலுவலர் சுப்பிரமணி, கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர், ஆகியோர் மேற்கொண்டனர்.
முன்னதாக பொன்னேரியில் உள்ள தமிழ் நாடு தீயணைப்பு மற் றும் மீட்பு பணி நிலைய சார்பில் நிலைய அலுவலர் சம்பத் தலை மையில் பள்ளி வாகனங்களில் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி உடனடியாக காப்பாற்றுவது தீயை அணைப் பது குறித்து செயல்முறை விளக்க ங்களை விளக்கினர்.மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனைகள் செய்யப்பட் டது.