கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க மாவட்ட அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின் பேரில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26,27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும் கோடைவிழாவிற்க்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் அப்பணிகளை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோரும் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகர நிர்வாகிகளும் கோடைவிழாவிற்க்கான ஆயத்தப் பணிகளை நேரடிபார்வைமூலம் துரிதப்படுத்தி வருகின்றனர்