கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து அருகே வாழைத்தோட்டம் பகுதியில் தனியார் உணவகம் நடத்திவந்த சந்திரன் என்பவரின் மனைவி சத்தியபாமா வயது 42 நேற்று இரவு உணவகப்பணிகள் முடித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் திடீரென உணவகம் தீப்பற்றி எரிந்துள்ளது இதையறிந்த அக்கம் பக்கத்தினர் எழுந்து சத்தம்போட்டு தட்டிஎழுப்பி உணவகத்தில் தூங்கிக்கொண்டிருந்த உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காப்பாற்றியுள்ளனர் சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு சென்ற வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பெரும் முயற்சியில் தீயை அணைத்து தீப்பிடித்ததற்காண காரணம் மற்றும் பொருள் சேதம் குறித்துமா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நள்ளிரவில் ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது