சோழவந்தான்
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்டா அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்.30.ல் கோவில் வளாகத்தில் 100.அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொட.ங்கியது. இதையெடுத்து மே.5.ல் .பக்தர்கள் காப்பு கட்டு வைபவமும்.மே.21.தேதி இரவு 7.மணிக்கு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் மே..22.ல் வைகையாற்றி லிருந்து பக்தர்கள் பால்குடம் தீ சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும். மே.23.ல் நேற்று 250.க்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றபோது ஊராட்சி 3.வது உறுப்பினர். செல்வராணி கந்தசாமி. முளைபாரி தூக்கி சென்ற அனைவருக்கு சில்வர் வாளி.சட்டிகளை பரிசாக வழங்கினார்.மேலும்அன்று மாலை முளைப்பாரியை வைகையாற்றில் கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இவ்விழா ஏற்பாடுகளை நாடார் உறைவின்முறையினர் செய்து வருகின்றனர்.