எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தருக்கு உமையமை ஞானப்பால் வழங்கிய தளமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதனிடையே கும்பாபிஷேக விழாவை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சீர்காழி சட்டநாத சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்தார் அவருக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தருமையாதினம் மாசிலாமணி நிலையத்திற்கு சென்ற ஆளுநர் ஆர் எம் ரவிக்கு திருஞானசம்பந்தர் தம்பிரான் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ப்பளிக்கப்பட்டது. பின்னர் தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்
அதனைத் தொடர்ந்து சட்டநாதர் சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் ரவி அங்கு ஐந்தாயிரம் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடிய நாட்டிய நாட்டியஞ்சலி, நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு நடனமாடிய நிகழ்ச்சியை சிறிது நேரம் கண்டு ரசித்தார். அதன் பின்னர் யாகசாலை பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்து பின்னர் கடந்த மாதம் கோவில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை பார்வையிட்டார் பின்னர் புறப்பட்டுச் சென்றார்
ஆளுநர் ரவி வருகை ஒட்டி காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு மாவட்ட எஸ்பி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு மாவட்ட எஸ்பி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்