பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கபிஸ்தலம் சாலையில் உள்ளது சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது
இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிப்பது வழக்கம்.
மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். தற்போது இந்த பூங்கா பாபநாசம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்கா முழுவதும் புல்,புதருமாக குப்பை மேடாக காணப்படுவதோடு நடைபாதை மேடைகள் சேதமடைந்து கிடக்கிறது.
பூங்காவின் முன்புற பகுதிகளில் குப்பை வண்டி நிறுத்தும் இடமாக மாறி உள்ளது
உடனடியாக சம்பந்தப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.