திருக்கோவலூர்
விதை விருட்சம் அறக்கட்டளையும், திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கமும் இணைந்து செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு திருக்கோவலூர் கோவல் தமிழ்ச்சங்கத் தலைவர் பாவலர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.
விதை விருட்சம் அறக்கட்டளை சிறப்புத் தலைவர் முனைவர் மு.செந்தில்குமார் முன்னிலை வகித்தார் கவிஞர் கவிநிலவன் வரவேற்றார் நல்நூலகர் மு. அன்பழகன் தொடக்கவுரையாற்றினார்.
பேச்சாளர்கள், உதயகுமார் சீனிவாசன், இளம்அழகர் செல்வராஜ், தமிழாசிரியர் நாகராஜன், சி.கனிமொழி, சௌமியா, ஏ.கிருபா கணேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி அளித்தனர் விதை விருட்சம் அறக் கட்டளையின் தலைவர் அ.சிதம்பரநாதன் மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.
கோவலடிகள் ம.ரா.குமாரசாமியார் அறக்கட்டளையின் தலைவர் தணிகை கலைமணி, கவிஞர்கள் மு.கலியபெருமாள், அருள்நாதன் தங்கராசு, கு.கல்யாண்குமார், லில்லிஏஞ்சல், விருதுராஜா, சி.தானிவேல், பொன்.முருகன், நூலகர் மு.சாந்தி, மித்ராதேவி, சு.சம்பத், ஆ.வனிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சே.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.