தினேஷ்குமார் செய்தியாளர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஏரியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான பழக்கூழ் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரானது ஏரியில் கலந்து ஏரியில் உள்ள மீன்கள் இறந்து விடுகிறது.
மேலும் இந்த கழிவு நீரின் காரணமாக ஏரி மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது இதை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல பொறுப்பாளர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் சிவா,கோபி, சுற்றுச்சூழல் பாசறையின் மாநில பொருளாளர் பிரதீப்,திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் மாறப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சதீஷ்
சிவா மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..