பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மானங்கோரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக வெட்டாறு ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அம்மன் காளியம்மன் கருப்புசாமி வேடமணிந்து திருநங்கைகள் திருநடனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தது வீடுகள் தோறும் சக்தி கரகத்திற்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்
அதனைத் தொடர்ந்து காளியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.