பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில், மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டும் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரையிலான மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்கான ஆலோசனைள் நடைபெற்றது. இதில் உளவியல் ஆலோசகர்கள், கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கல்லூரி ஆசிரியர்களும் மற்றும் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளின் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித செபஸ்தியார் திருத்தலத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இறுதியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.