வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்
58-நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம் மைதீன் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஓட்டுநர் அணித்தலைவர் ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அனைவராலும் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மங்கல தாஸ், டைலர் நாகராஜன், நாசர்,முகமது ரபில்,அப்துல் ரஹ்மான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.