எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே ரூ.14 லட்சத்தில் இரண்டு பேருந்து பயணிகள் நிழல் குடைகள்.மற்றும் புதிய உயர்மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பிருமான நிவேதா.எம்.முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் மற்றும் சாயாவனம் பகுதியில் ரூ.14 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா. முருகன் கலந்து கொண்டு புதிய பணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பயனாளிகள் 300 பேருக்கு சேலைகளை வழங்கினார். மேலையூர் கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய உயர்மின் பாதை ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.புதிய மின் பாதையை கிராமமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார். இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பவள்ளி ராஜா, சசிகுமார், திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு. குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன் மற்றும் பலர் கலந்து