பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் திடீர் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாகசம்பவ இடத்திற்கு மின்சார வாரிய அதிகாரிகளும் மின் ஊழியர்களும் விரைந்து வந்து மின்சார விநியோகத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர்.
பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது .