தென்காசி மாவட்டம்
கடையத்தில் நடைபெற்ற தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடையத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யால் திறக்கப்பட்ட, புதிய ஒன்றிய கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அவைத்தலைவர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள் வருமாறு:-
கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், திறந்து வைத்த கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது, கடையத்தில் நடைபெற்ற முத்தழிறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, சிறப்புரை ஆற்றி 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், ஒன்றியக்கழகம் சார்பி;ல் 2 இடங்களில்கழக கொடியேற்றிய கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது, இப்பொதுக்கூட்டத்தை கடையத்தில் நடத்திட வாய்ப்பளித்த மாவட்டக்கழக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனுக்கு நன்றி தெரிவிப்பது,
மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி.யை அழைத்து வந்த சிறப்பாக கூட்டத்தை நடத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவிப்பது, வரும் 25ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில் கழக கொடியேற்று விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பெருமாள், ஒன்றிய நிர் வாகிகள் புகாரி மீரா சாகிப், கோதர் மைதீன், வின் சென்ட் பால், சுரேஷ், முல்லையப்பன், சுந்தரம், வின ;சென்ட், அழகை முருகன், சதாம் உசேன், பேரூர் செய லாளர் அழகேசன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பாண்டிய ராணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா, புஷ்பராணி, ஆர்.எஸ.; பாண்டியன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்சசிகுமார் நன்றி கூறினார்.