தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையம் தெற்கு ஒன்றியம், கடையத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு -3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முன்னதாக கடையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டனர். மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமையில், கனிமொழி எம்.பி. ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக கடையம் வந்த அவருக்கு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவி வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், முல்லையப்பன் சுரேஷ், கோபி, கமல், முருகன், தமிழரசி, ரம்யா, ஆவுடை கோமதி, .பிரமு, பிரபா, அந்தோணிசாமி,சதாம் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.