தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்
அருள்மிகுஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு டாக்டர் ஒருவர் காணிக்கையாக டிராக்டர் வழங்கியுள்ளார்.

சங்கரன்கோவில் துர்கா மருத்துவமனை மருத்துவர் சுப்புராஜராகவன் கோயிலுக்கு தனது காணிக்கையாக டிராக்டர் வழங்கி உள்ளார்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறிய போது திருக்கோயிலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி செல்வதற்கு மிகுந்த சிரமம் இருந்த நிலையில் தற்போது இந்த டிராக்டர் வாகனம் மூலம் எளிதாக குப்பை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியே எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் எனவும், மேலும் பல்வேறு பணிகளுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இதை வழங்கிய உபயதாரர்களுக்கு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *