முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பங்கேற்ப்பு
கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகபுர கிராமத்தில் அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் அவர்களின் இல்ல திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய இல்லத்தை திறந்து வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், கரடிகுளம் கிளை செயலாளர் அய்யணு, மகளிரணி சார்பில், கெளரிமனோகரி, செட்டி குறிச்சி கிருஷ்ணசாமி, தொழிலதிபர் அந்தோணிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.