வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 267-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

இதைத்தவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 865 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 ஆயிரத்து 10 கிராம் காணிக்கையாக கிடைத்தது. 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *