நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.உமா தலைமையில் திங்கள் கிழமை (12.06.2023) நடைபெற்றது.

நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 353 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, வருவாய்த் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு பிறப்பு சான்றிதழ் பெயர் திருத்த சான்றிதழ், தலா ரூ.75,000/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக நலத்துறையின் சார்பில் தலா ரூ.4,500/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,920/-மதிப்பில் மானியத்துடன் கூடிய சிறுதளைகள் இடுபொருட்களும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,480/-மதிப்பில் மானியத்துடன் கூடிய மின் தெளிப்பான் கருவியும், மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், ரூ.1,960/- மதிப்பில் 1 பயனாளிக்கு தார்பாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,500/- மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசி கருவியும், ரூ.10,185/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு உருபெருக்கி கருவியும், தலா ரூ.2,780/- மதிப்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியும், ரூ.6,450/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியும், 3 திருநங்கைகள் உள்ளிட்ட 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினையும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.2.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன்  உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *