தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதிஅக்ரஹாரம் ஊராட்சியில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கவிதா (45). கணவர் பெயர் மனோகரன்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் வீட்டின் தோட்டத்தில் மாட்டிற்கு வைக்கோல் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் பாம்பு கடித்த விவரத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சில் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் கவிதாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேற்படி சிகிச்சை பலனின்றி கவிதா மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.