வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய குழ கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி தனியார் திருமண அரங்கில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய குழ கூட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், சங்கத்தின் மாவட்ட பொருளார் ராவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். எதிர்கால கடமைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் சின்னராஜா பேசினார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் 10ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைப்பது, மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்ஜ் புசனை கைது செய்ய வலியுறுத்தி வருகின்ற 22-ந்தேதி நடைப்பெறும் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை பேரணிக்கு வலங்கைமான்ஒன்றியத்திலிருந்து விவசாயிகள் பங்கு பெறுவது, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பருத்தி கிலோ ஒன்றுக்கு அரசு ஆதார விலையாகரூ. 120 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பூசாந்திரம், ராஜேஷ் கண்ணா, மோகன், மாலா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.