திருவண்ணாமலை
திருவண்ணாமலை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமகுமாரி தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் .இந்த ஆர்ப்பாட்டத்தில்சிறப்பு அழைப்பாளராகமாநிலத் துணைத் தலைவர் சுதாகரன் கலந்து கொண்டு.கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
பின்னர் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஐந்து சதவீத வருடாந்திர ஊதிய உயர்வினை வழங்கப்பட்ட வேண்டும். இந்தாண்டு வழங்க வேண்டிய வருடாந்திர ஊதியத்தை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு வழங்கப்படும் மாதத்தின்முதல் ஊதியத்தினைதமிழக அரசு மாத ஊதிய வழங்கிட வேண்டும்.
கருவூலம் மூலமாக பெரும் அனைத்தும் தொகுப்பூதியம் செவிலியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம்18000மகா தமிழக அரசு வழங்கிட வேண்டும்.உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரி. மாவட்ட பொருளாளர் நந்தினி உட்பட 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்