அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை கருப்பசாமி, ஸ்ரீ மண்டு சோலைச்சி,
ஸ்ரீ அசையாமணிகட்டி,ஸ்ரீ அம்மாச்சி அம்மன்,ஸ்ரீ நாச்சி அம்மன்,
ஸ்ரீ மந்தைஅம்மன்,ஸ்ரீ மஞ்சமலை, ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ ஆதிசிவன், ஆகிய தெய்வங்களுக்கு வைகாசி உற்சவ திருவிழா நடைபெற்றது.

12.O6.23 திங்கட்கிழமை அன்று அதிகாலை விநாயகருக்கு கணபதி ஹோமம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது அன்று மாலை திருவிளக்கு பூஜையுடன் கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது மறுநாள் குட்டிமேய்க்கிபட்டி சென்று பூசாரி வீட்டில் இருந்து

ஸ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீஅய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சின்ன இலந்தை குளம் அழைத்து வருதல் அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து சக்தி கிடாய் வெட்டுதல் அன்று மாலை ஸ்ரீ அம்மாச்சி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து முளைப்பாரியுடன் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக மந்தை அம்மன் கோவிலுக்கு சுவாமி சென்று அடைந்தது மறுநாள் காலை பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல் பொங்கல் வைத்தல் கிடாய் வெட்டுதல் அக்னி சட்டி எடுத்தல் உருண்டு கொடுத்தல் அழகு குத்துதல் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

அன்று மாலை ஸ்ரீ மந்தை அம்மன் முளைப்பாரியுடன் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பூஞ்சோலை சென்றடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது இவ்விழா ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம் கிராம மரியாதைக்காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *