நாமக்கல்

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (14.06.2023-ந் தேதி) நடந்த நிகழ்ச்சியில் காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை மின்மயமாக்கல் திட்டத்தின்படி
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி மேற்கொள்ள முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு நகரம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய எழுத்தர் ஆகியோர்களுக்கு தலா ஒன்று என்ற வீதத்தில் 15 மொபைல் டேப்லெட்கள் (Mobile Tablets) நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் வழங்கினார்

இத்தகசியில் பேசிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் இதன் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தி காவல்துறை மேலதிகாரியின் உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்றி வைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவலர்களை அவர் கேட்டுக்கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *