கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தெற்கு வாண்டான் விடுதி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய நாளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி பேபி ஷாலினி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும், அரசு பள்ளியில் மாணவர்களுக்காக காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சிறப்பான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட மேல்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விலையில்லா புத்தகம்,பாடக் குறிப்பேடு, காலணி உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்கவழங்கப்படுகிறதுஎன்றும், தொடக்கநிலை மாணவர்களுக்கு ஊஞ்சல், உயர்நிலை மாணவர்களுக்கு தேன் சிட்டு சிற்றிதழும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் முத்தையன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஊர் பொதுமக்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக ஜாய்சி ராணி நன்றி கூறினார்