அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் திராவிட முன்னேற்ற கழக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகரச் செயலாளர் மனோகரா வேல்பாண்டியன், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், இளைஞரணி பிரபு, ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆதிதிராவிடர் அணி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் கே.பி.செல்வம், சுரேஷ், வீரப்பன், கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மருது, அலங்காநல்லூர் நகர இளைஞரணி வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் சாதுராஜன் கலந்து கொண்டு பேசுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கண்டது திமுக ஆட்சி தான். ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்ட மைதானம் கீழக்கரையில் கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது, நம் மதுரையின் மதுரை வீரனாக திகழும் அமைச்சர் மூர்த்தி அவர்கள் இப்பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும் தற்போது அமைச்சராக இருக்கும் பொழுதும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
அவரைத் தொடர்ந்து கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் பொதுமக்களின் துயர் துடைக்க இரவு பகல் பாராமல் தொடர்ந்து தங்கள் பகுதிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார் கிராமப் பகுதிகளில் சாலைகள் அனைத்தும் விரிவு படுத்தப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுது ஏற்படும் நேரம் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை வர வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாத திட்டங்களை நமது ஆட்சியில் நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கின்றோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தளபதியார் அவர்கள் 40 தொகுதிகளிலும் யாரை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்களோ அவர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுவோம்.. இவ்வாறு அவர் பேசினார்.