வலங்கைமான் மணவெளிதெரு கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் ஆலயத்தில் தேர் பவனி விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், குடந்தை மறை மாவட்டம், வலங்கைமான் பங்கு, மணவெளிதெரு கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் ஆலயத்தில் முதல் நாள் (12.06.23 திங்கட்கிழமை)
மாலை 6-மணிக்கு ஜெபமாலை ,நவநாள்,மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, தொடர்ந்து மைய சிந்தனை, தலமைஅருட்பணி. சின்னப்பா ஒசிடி, அருளுரை அருட்பணி. வின்சென்ட் டோமினிக் ஒசிடி. இரண்டாம் நாள் (13.06.23 செவ்வாய்க்கிழமை) மாலை 5-மணிக்கு ஜெபமாலை, நவநாள், மாலை 6-மணிக்கு திருப்பலி மற்றும் சம் மனசு தேர், புனித மாதா தேர், புனித அந்தோனியார் அலங்கார சிறப்பு தேர் பவனி, அதனைத்தொடர்ந்து மைய சிந்தனை, தலமை&அருளுரை அருட்பணி. வலங்கைமான் பங்கு தந்தை ஆல்பர்ட் ஒசிடி,
மூன்றாம் நாள் (14.06.23 புதன்கிழமை) மாலை 5-மணிக்கு ஜெபமாலை, நவநாள், மாலை 6-மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் அதனைத்தொடர்ந்து மைய சிந்தனை, தலமை
அருட்பணி. மோசஸ் ஒசிடி, அருளுரை அருட்பணி லாசர் ஒசிடி இவ்வாறு மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மூன்று நாட்களும் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் திரண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிராமவாசிகள், வலங்கைமான், மணவெளிதெரு குமரன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் விழா உபயதாரார்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *