பொன்னேரி
பொன்னேரியில் ஏ.ஓன் ரியல் எஸ்டேட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தர நல சங்கத்தின் தேசிய தலைவர் வி என் கண்ணன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், ஐ.என். ஆர் பி டி எம் ஏ மாநில பில்டர் அமைப்பாளர் டாக்டர் ஜி.வி.என். குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் வி.எம்.எஸ் காம்ப்ளக்ஸ்சில் ஏ.ஓன். ரியல் எஸ்டேட் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆர் எம் ஆர் பேரவை ஒருங்கிணைப்பாளரும் ரியல் எஸ்டேட் மற்றும் லேண்ட் டெவலப்மென்ட் அசோசியேஷன் மாநில நிர்வாகியும் ஜி.வி.என். ஹோம்ஸ் இயக்குனருமான தடப்பெரும்பாக்கம் டாக்டர் ஜி.வி. என்.குமார் தலைமை தாங்கினார். மாநில தரகர் அமைப்பாளர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட பொரு ளாளர் மகேந்திரன், வட்ட செயலா ளர் பிரசாத், ஆகியோர் வரவேற் புரை நிகழ்த்தினார்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர் நில த் தரகர்கள் நல சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் விஎன் கண்ணன், ஆர் எம் ஆர் பேரவை ஒருங்கி ணைப்பாளரும் ரியல் எஸ்டேட் மற்றும் லேண்ட் டெவலப் மென்ட் அசோசியேஷன் மாநில நிர்வாகி யுமான தடப்பெரும்பாக்கம் ஜி.வி. என்.குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சின்னதுரை, ஆதித்தமிழர் விடுதலை இயக்க கொள்கை பரப்பு செயலாளர் அருள் தாஸ், பாடலாசிரியர் சினிமாத்துறை எஸ் திருமுருகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் மணவாளன், வழக்கறிஞர் மணிகண்டன், விடுதலை சிறுத்தை கட்சி திருவடி, மற்றும் நிலத் தரகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரியல் எஸ்டேட் திருவள்ளூர் மாவ ட்ட துணைத் தலைவர் (தரகர்) கே மோசஸ் கோபி, மாநிலத் துணை செயலாளர் (பில்டர்) புகழரசன், ஜெ அருண், ஆகியோர் செய்திரு ந்தனர்முன்னதாக பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியான ரமணியை பாராட்டி சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி பாராடடினர்.