தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தலின்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த காரிய கர்த்தாக்கல் சந்திப்பு கூட்டம் இன்று காலை நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இந்த மகள் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எஸ். சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த காரிய கர்த்தாக்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார்

அப்போது பேசிய மாநில செயலாளர் எஸ். சதீஷ்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்தும் அதே போல அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தமிழக முதல்வராக வெற்றி பெறும் நிலை வரும் அப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் தமிழகத்திலும் பாஜக ஆட்சி வந்தது என்று மகிழ்ச்சியை அது ஏற்படுத்தும் என்று அதற்காக அனைவரும் உழைப்போம்

அந்த நிலை பாரதிய ஜனதா கட்சியில் மூத்த காரியம் கர்த்தாக்களுக்கு மிக மகிழ்ச்சியை தரும் என்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எஸ். சதீஷ்குமார் குறிப்பிட்டார்

இந்த நிகழ்ச்சியில் பாரதிய பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் எம். எஸ் .மணி முன்னிலை வகித்தார்

மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே .மனோகரன் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சத்யா பானு, மாவட்ட துணை தலைவர் சுகன்யா, மாவட்ட செயலாளர் ஜெயந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

வந்திருந்து அனைத்து மூத்த காரியகர்த்தாக்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வேஷ்டி சட்டை வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இறுதியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க துணை தலைவர் சுகன்யா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *