தேனி மாவட்டம் பெரியகுளம். நகராட்சிக்கு உட்பட்ட 13, 14,15, ஆகிய வார்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்,பூங்கா அமைக்கப்பட்டது.
அந்தப் பூங்காவிற்கு சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க கோரி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் அவர்களிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா நாகலிங்கம்,மதன்குமார்,பவானி முருகன் ஆகியோர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர் உடனடியாக நகராட்சி ஆணையாளருக்கும் பொறியாளருக்கும் பரிந்துரை செய்து நகராட்சி பூங்காவிற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் வைக்க பரிந்துரை செய்து,பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.நகராட்சி தலைவர் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.