தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 32- கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக் கான கிராம வளர்ச்சி (VPDP ) சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர்
எம். திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ் மற்றும் விஜயகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க ப்பட்டது.
அதனையடுத்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் எம். திவ்யா மணிகண்டன் தலைமையேற்று உறுதிமொழி அனைவரும் எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு
ட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அலுவலக பணியாளர்கள்
கலந்து கொண்டனர்