மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடியால் 1,945 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.இதனால், பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, குடியிருப்புகள் மற்றும் அலுவலக பகுதிகளில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடிக்க தன்னார் வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பாம்பு கடியால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்?, அவர்களில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் ? என்பது குறித்த விபரங்களை, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

அதற்கு, மதுரை மாவட்டத் தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் 1,945 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை மூலம் சுமார் 1,909 பேர் காப்பாற்றப்பட்டுள்ள தாகவும், பாம்புக்கடியால் கடந்த 2 ஆண்டுகளில் 36பேர் உயிரிழந்துள்ள தாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *