அழகர்கோவில்
மதுரை மாவட்டம் காஞ்சரம் பேட்டை அருகே பாறைபட்டி கிராமத்தில் ஆனி மாத சர்வ அமாவாசை பூஜைகள் நடந்தது. இதில் கன்னிமார் ஏழுஅம்மன் சிலைகளுக்கு ரோஜா, மல்லிகை. முல்லை, சம்மங்கி, மரிக்கொழுந்து, உள்ளிட்ட | பல்வேறு பூக்களின் மாலைகளால் அலங்கரிக்கபட்டு, பட்டாடைகள், நாணல் புல்கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள். கூட்டு வழிபாடுகள் நடந்தது.
தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த பூஜையில் மதுரை, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதே ஊர் சித்தி விநாயகர். மந்தை கருப்பு சுவாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது, இந்த விழா ஏற்பாடுகளை பாறை பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.