திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூரில் ஆகாஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் ஜெ.ஆகாச மூர்த்தி எழுதிய போட்டித் தேர்வுக்கான திருக்குறள் என்ற நூல்வெளியீட்டு விழா மைய ஒருங்கிணைப்பாளர் விமல் அரசன் தலைமையில் நடைபெற்றது.
நல்நூலகர் மு.அன்பழகன், நல்லாசிரியர் அப்பர் சுந்தரம், கவிஞர் மித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மங்கை அரசி வரவேற்றார் நூலினை கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் சிங்கார உதியன் வெளியிட தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அருள் நாதன் தங்கராசு பெற்றுக்கொண்டார்.
முதுகலைத் தமிழாசிரியர் சிவா நூலினை ஆய்வு செய்து பேசினார்சிவரஞ்சனி நன்றி கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.