சோழவந்தான்,
மதுரை சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ரூ 5.கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நிலையத்தில் குறைகளை கேட்டறிந்து கிரேடு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது குறித்து சோழவந்தானைச் சுற்றியுள்ள கிராம மக்களிடமும், ரயில் பயணியர் சங்க நிர்வாகிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வெங்கடேசன் எம்.எல்.எ தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா, முன்னிலை வகித்தனர்..இரயிவே மக்கள் தொடர்பு அலுவலர் கொபிநாத் வரவேற்றார்..
இதன் பின்னர் இரயில் பயனர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தனர் இதில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் உமா மகேஸ்வரி பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ரயில் பயணியர்கள் சங்க நிர்வாகிகள், சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பதிவு செய்து, முக்கிய கோரிக்கையாக , நகரி ரோட்டில் இரயில் நிலையத்திற்கு புதிய நுழைவு வாயில் அமைக்கவும் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, ஹோட்டல், சப்வே, அல்லது அண்டர் பைபாஸ் வெயிட்டிங் ரூம் லிப்ட்வசதி உள்ளிட்ட.பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இரயிவே அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினர்