அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு வட்டார களஞ்சியத்தின் 20வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம் மற்றும் வட்டார களஞ்சியம் பரஸ்பரத்தின் 11 ஆவது ஆண்டு பொது பேரவை கூட்டம் அலங்காநல்லூர்சுபிக் ஷா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மண்டல ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் வீட்டுக் கடன் திட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகுமார், கலந்து கொண்டு திட்டம் பற்றி எடுத்துக் கூறினார் வட்டார ஒருங்கிணைப்பாளர் வள்ளி, குழு தலைவிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் விழாவில் 44 கிராமங்களில் செயல்படும் 307 களஞ்சியங்களில் பொறுப்பாளர்களும் 900 பேர் கலந்து கொண்டனர்..