நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்குவதற்காக நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர்யினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ் முன்னிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்ட முசிறி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் 12.50 கி.மீ தொலைவிற்கு இணைப்பு குழாய்கள் அமைத்து நீர் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரிய நாமக்கல் செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் அகிலா பானு. உதவி பொறியாளர் முனியன், அட்மா குழு தலைவர் தங்கவேல் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *