பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து இறைச்சிக்காக மான் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, புள்ளிமான், கடமான், அரிய வகை வெளிமான்,சருகுமான் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் பவானிசாகர் வனச்சரத்துக்குட்பட்ட வரப்பள்ளம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் பவானிசாகர் வனச்சகர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர் அப்போது முட்புதரில் இரண்டு பேர் புள்ளிமான்களை சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்யும் நோக்கில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

அப்போது வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து மான் தலைகள் மற்றும் மான் இறைச்சி, மான் கால்கள், சுருக்கு கம்பி கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் பவானிசாகர் குடில்நகர் சேர்ந்த ஓதிச்சாமி (58), தினேஷ் குமார்(46) இவர்கள் இருவரும் வனத்துறையினர் இருவரையும் கைது செய்து பவானிசாகர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *