பொன்னேரி

பண்டி காவலூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற் கான பூமி பூஜை நடைபெற்றது.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது. பண்டிக்காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் புதிய அங்கன் வாடி கட்டிடம் கட்டுவதற்காக என்.ஆர்.ஜி.எஸ்.திட்ட நிதியின் கீழ்  ரூ 14.80 நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டது.

இதனையடுத்து புதிய அங்கன் வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பண்டி காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. சதீஷ்குமார்,பணிதள மேற்பார் வையாளர் வெங்கடேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, ஒப்பந்தக்காரர் கோபி, ஊராட்சி செயலாளர் குமார், (பொறுப்பு )மற்றும் ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணி செய்யும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *