தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை இணைந்து குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை சிறப்பு முகாம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு பரிசோதனை முகாமில் 90 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..