கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஜாக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.

கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்றைய தினம் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர்.

குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா திருமண மஹாலில் இன்று காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாட படுவதாகவும்,
அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் , ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

பெருபான்மை இஸ்லாமியர்கள் நாளை பக்ரீத் பண்டிகையினை கொண்டாட உள்ளது குறிப்பிடதக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *