திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்பாக முதற் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுதர்ஷன ஹோமம், கணபதி ஹோமம், காயத்ரி ஜப பூஜை ஆகியவை நடந்தேறியது. மேலும் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பூஜிக்கப்பட்ட கும்ப கலச நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாம்பட்டு லட்சுமணன் ஸ்வாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவின் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.

மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலை உற்சவ மூர்த்தி மேள தாளத்துடன் வீதியுலா நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *