ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த்தின் மாவட்ட துணைத் தலைவர் முகமது பாசித் திருவாரூர் நகராட்சி நடுநிலை பள்ளி வளாகத்திலும், திருவாரூர் நகர தலைவர் மீரான் கொடிக்கால்பாளையம் மலாயா கார்டன் வளாகத்திலும், மாவட்ட துணை செயலாளர்கள் மாலிக், யாசர் மரக்கடை மற்றும் அத்திக்கடை‌ பகுதியிலும், பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதே போன்று அடியேக்கமங்கலம், புலிவலம், கூத்தாநல்லூர், தண்ணீர்குண்ணம், குடவாசல், பொதக்குடி, வாழ்க்கை, கொல்லாபுரம், நன்னிலம் போன்ற ஊர்களிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் ஈதுல் அல்ஹா எனும் பெருநாளின் தொழுகையை முடித்து விட்டு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்,இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள்ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம் , இந்தப்பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம், மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக்கொள்வதையே இப்பெருநாள் வலியுறுத்துகிறது என்று கூறினார்கள்.

சிறப்புத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்,
கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *