சோழவந்தான்
சோழவந்தான், அருகே காடுபட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அங்காளஈஸ்வரி மற்றும் காளியம்மன் கோவிகளில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் முடிந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை காளியம்மன்கேவில் முன்பு நாகேஷ்வரர் சிவச்சாரியார் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
மூன்றுகால பூஜைகள் முடிந்து நேற்று யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி.காலை. 9.15.மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது.இதேபோல் காடுபட்டி கிராமத்திற்கு வடக்கு திசையில் அமைந்து அருள்பாலித்து வரும் அங்காளஈஸ்வரி கோவிலில் திருப்பணிகள் முடிந்தநிலையில் செந்தில்சிவச்சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கி மூன்று கால பூஜைகழ் நடந்த பின்பு நேற்று யாகசாலைலிருந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்து பின் கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்து பொது மக்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
இதைதொடர்ந்து அங்காளஈஸ்வரி காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை காடுபட்டடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.