தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் நாகராஜ் தலைமையில்,செயல் அலுவலர் மோகன்ராம், துணைத்தலைவர் ராதா ராஜேஷ், முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி பகுதிகளில் சிமெண்ட் சாலை, தார் சாலை,மற்றும் சாக்கடை வசதிகள் அமைப்பது மராமத்து பணிகள் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேவராஜ், குமரேசன், கைலாசம், பூசாரி கருப்பன், முருகாயி, முத்து காமாட்சி, அழகுத்தாய், அனிதா, சாந்தி, சிட்டம்மாள், லட்சுமணன், கோமதி, மற்றும்ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.