எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சோதியாகுடி ஊராட்சி சிதம்பரநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மீனாட்சி அம்மாள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய பொறுப்பாளர் தமிழன் ரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கம் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், கொள்ளிடம் பொறுப்பாளர்கள் ரமேஷ் ,ஜெகன் ,சுதிப் மகளிர் அணி தலைவி கோகிலா, சீர்காழி ஒன்றிய தலைவர் கமல் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.