கோவை மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் அறிந்த பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது தீ விபத்துக்குள்ளான சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டு தீ விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தகவல் கேட்டறிந்தார்.
உடன் மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜீவ முருகராஜ் 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி , வட்ட செயலாளர் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.